செய்திகள்

தன்னிடம் வரும் பக்தர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து ஆசி வழங்கிய போலி சாமியார் கைது

Published On 2018-08-24 19:45 GMT   |   Update On 2018-08-24 19:45 GMT
அசாம் மாநிலத்தில் முத்தமிட்டு ஆசி வழங்கினால் தீராத பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் எனக்கூறி பெண்களை அத்துமீறி முத்தம் கொடுத்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
கவுகாத்தி :

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ராமு பிரகாஷ் சவுகான் என்பவர் தான் ஒரு விஷ்ணு பக்தன் என்றும், தன் உடலில் கடவுள் விஷ்ணு இருப்பதாக கூறி  அதன் மூலம் ஆசி வழங்கி தீராத பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் பிரசாரங்களை மேற்கொண்டார்.

இதனை நம்பி பலரும் அவரிடம் வந்து ஆசி பெற்று சென்றுள்ளனர்.  அவரிடன் வந்து ஆசி பெறுபவர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து அருளாசி வழங்குவது அவரது வழக்கமாம்.

பெண் பக்தர்களுக்கும் இவ்வாறு தான் அவர் ஆசி வழங்குவார்.  ஆனாலும், அதனை பொருட்படுத்தாத ஏராளமான பெண்கள் பிரச்சனைகள் தீர்ந்தால் சரி என்று அவரிடம் வந்து ஆசி பெற்று சென்றுள்ளனர்.

இதன் மூலம் நோய்கள் தீருவதாகவும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதாகவும், மனதளவில் பாதிப்புகள் குறைவதாகவும் பக்தர்கள் நம்பினார்கள்.
Tags:    

Similar News