செய்திகள்

காஷ்மீரில் வீடு புகுந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

Published On 2018-08-22 16:29 GMT   |   Update On 2018-08-22 16:29 GMT
ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையில் சப்-இன்பெக்டராக பணியாற்றும் முகம்மது அஷார்ப் தார், ஈத் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்த நிலையில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். #Kashmir #Pulwama
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் சப்-இன்பெக்டராக பணியாற்றும் முகம்மது அஷார்ப் தார், ஈத் பண்டிகைக்காக புல்வாமாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்துள்ள பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

குல்காம் பகுதியில் பயிற்சி காவலர் சுட்டுக்கொல்லப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News