செய்திகள்
வாஜ்பாய் உடலுக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்
டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் உள்பட நேரில் சென்று விசாரித்து வந்தனர்.
இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வாஜ்பாயின் உடல் அவரது டெல்லி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தி, தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், வாஜ்பாய் உடலுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் உள்பட நேரில் சென்று விசாரித்து வந்தனர்.
இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வாஜ்பாயின் உடல் அவரது டெல்லி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தி, தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், வாஜ்பாய் உடலுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.