செய்திகள்

ஒடிசாவில் உள்ள ஆந்திரா வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.11 லட்சம் கொள்ளை

Published On 2018-08-03 18:59 IST   |   Update On 2018-08-03 18:59:00 IST
ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திரா வங்கியில் இன்று துப்பாக்கி முனையில் பணியாளர்களை மிரட்டி 11 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர். #Andhrabank #Andhrabankloot #SambalpurAndhrabank
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்துக்குட்பட்ட ஜமன்கிரா பகுதியில் ஆந்திரா வங்கியின் கிளையில் இன்று வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் நிறைந்திருந்த நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்த மூன்றுபேர் அங்கு வந்தனர்.

துப்பாக்கி முனையில் வங்கி பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டிய அவர்கள் வங்கியில் இருந்த 10 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தனர். அங்கிருந்து சென்றபோது வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து அதில் இருந்த காட்சிப் பதிவு பகுதியையும் (ஹார்ட் டிஸ்க்) எடுத்துகொண்டு மின்னல் வேகத்தில் தப்பி தலைமறைவாகினர்.

இந்த துணிகர சம்பவம் தொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்துவந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பல்பூர் மாவட்ட எல்லைப்புற சாலைகளில் தடுப்புகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #Andhrabank #Andhrabankloot #SambalpurAndhrabank
Tags:    

Similar News