செய்திகள்

நாம் இருவர் நமக்கு இருவர் - புதிய சட்டம் கொண்டு வர பாஜக எம்பி வலியுறுத்தல்

Published On 2018-08-02 09:48 GMT   |   Update On 2018-08-02 09:48 GMT
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை தடை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என மக்களவையில் பா.ஜ.க. எம்பி வலியுறுத்தினார். #PopulationControlLaw
புதுடெல்லி:

மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. உதய் பிரதாப் சிங், மக்களவையில் இன்று ஜீரோ அவரில்  பேசியதாவது:-

நாட்டில் மக்கள் தொகை பெருகி வருவதால் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. அதேபோன்று இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதை தடுக்கவும் வகை செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும்.



பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்திய அரசால், இதுபோன்ற சட்டத்தையும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். #PopulationControlLaw
Tags:    

Similar News