செய்திகள்

கர்நாடகாவில் கிரேன் விழுந்து விபத்து - 6 பேர் பலி

Published On 2018-08-03 01:03 GMT   |   Update On 2018-08-03 01:03 GMT
கர்நாடகாவில் கட்டுமான கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பெங்களூரு :

கர்நாடக மாநிலம், கலபுராகி மாவட்டத்தில் புதிதாக சிமெண்ட் தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இங்கு, கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீர் என விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும், 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புக்குழுவினர் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News