செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பிடிபட்டது

Published On 2018-07-31 11:51 GMT   |   Update On 2018-07-31 11:51 GMT
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்ல முயன்றவரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி:

டெல்லி விமான நிலையத்தில் நேற்று ஒருவர் ஹாங்காங் செல்வதற்காக காத்துக்கொண்டு இருந்தார். சந்தேகத்துக்கிடமான அவரது நடவடிக்கைகளால் அவரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 1,50,700 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் ) அவர் மறைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்த அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.

இதேபோல் சுமார் 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி செல்ல முயன்ற இன்னொரு நபரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். #forexsmuggling #Delhiairport
Tags:    

Similar News