செய்திகள்
ராஜஸ்தானில் தலித் வாலிபர் அடித்து கொலை - இருவர் கைது
ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் 22 வயது தலித் வாலிபரை கொடூரமாக தாக்கி கொலை செய்த கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். #Rajasthan
ஜெய்ப்பூர்:
இந்தியாவில் கும்பல் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. மக்கள் சட்டத்தை கையில் எடுத்து தாங்களே தண்டனை அளிப்பதாக எண்ணி, பல அப்பாவிகளின் உயிரை பறிக்கின்றனர்.
அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க தலித் வாலிபர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Rajasthan
இந்தியாவில் கும்பல் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. மக்கள் சட்டத்தை கையில் எடுத்து தாங்களே தண்டனை அளிப்பதாக எண்ணி, பல அப்பாவிகளின் உயிரை பறிக்கின்றனர்.
அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க தலித் வாலிபர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Rajasthan