செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Published On 2018-07-21 10:46 GMT   |   Update On 2018-07-21 10:46 GMT
காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #Militantsattack #SFpatrolparty
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் வாகனங்கள் மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று பிற்பகல் மட்டான் பகுதியில் பாம்ஸூ கிராமத்தின் அருகே பாதுகாப்பு வாகனங்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு சில பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாத பயங்கரவாதிகள் ஓட்டம் பிடித்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #Militantsattack #SFpatrolparty 
Tags:    

Similar News