செய்திகள்

காசர்கோட்டில் இன்று காலை ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி

Published On 2018-07-09 06:17 GMT   |   Update On 2018-07-09 06:17 GMT
காசர்கோட்டில் இன்று காலை ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கர்நாடக மாநிலம் மங்களாபுரத்தை சேர்ந்த 18 பேர் பாலக்காட்டில் நடந்த உறவினர் வீட்டு விசே‌ஷத்திற்கு ஜீப்பில் வந்தனர். விசே‌ஷம் முடிந்து நள்ளிரவு ஊருக்கு புறப்பட்டனர்.

இன்று காலை காசர்கோடு அருகே உள்ள உப்பளா என்ற இடத்தில் வந்தபோது எதிரே மங்களாபுரத்தில் இருந்து காசர்கோட்டுக்கு சரக்கு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த லாரி ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் அப்பளம்போல் நொறுங்கியது.

சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஜீப்பில் இருந்தவர்களை மீட்டபோது சம்பவ இடத்திலேயே 5 பேர் ரத்தவெள்ளத்தில் பலியானார்கள்.

மற்றவர்கள் படுகாயத்துடன் அலறி சத்தம்போட்டனர். காசர்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தன்.

இதில் 3 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இதனையடுத்து அவர்கள் மங்களாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று அதிகாலை முதலே கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரங்கள் உடனே தெரியவில்லை. இது குறித்து காசர்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

Tags:    

Similar News