செய்திகள்

3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார் பூடான் பிரதமர்

Published On 2018-07-03 11:40 GMT   |   Update On 2018-07-03 11:40 GMT
பூடான் நாட்டின் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே 3 நாள் அரசு முறை பயணமாக ஜூலை 5-ம் தேதி இந்தியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #BhutanPM
புதுடெல்லி:

இந்தியாவும் பூடானும் தூதரக ரீதியான நட்புறவு கொண்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜுலை 5-ம் தேதி முதல் 3 நாள் சுற்றுப்பயணமாக பூடான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே இந்தியா வரவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது டாஷோ ஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை சந்தித்து டோக்லாம் எல்லைப்பிரச்சனை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரையும் பூடான் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #BhutanPM
Tags:    

Similar News