செய்திகள்

டெல்லியில் ராணுவ வீரர்களிடமே கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்

Published On 2018-06-30 10:22 GMT   |   Update On 2018-06-30 10:22 GMT
டெல்லியில் உள்ள ரெயில் நிலையத்தில் இரண்டு ராணுவ வீரர்களின் உடைமைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது டெல்லி :

தலைநகர் டெல்லியில், பழைய டெல்லி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இரண்டு ராணுவ வீரர்கள், அங்குள்ள ஓய்வறையில் ஒன்றில் இன்று காலை தூங்கிக்கொண்டிருந்தனர். அந்நேரம், ராணுவ வீரர்களின் பெட்டிகள், அடையாள அட்டை, கைக்கடிகாரம் மற்றும் செல்போன்களை அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் திருடிக்கொண்டு ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக ரெயில்வே காவல் நிலையத்தில் ராணுவ வீரர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில்வே நிர்வாகமும்  விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News