செய்திகள்

மானசரோவர் யாத்திரை செல்ல ராகுல் காந்தி விண்ணப்பம் நிராகரிப்பு? - மத்திய அரசு விளக்கம்

Published On 2018-06-28 17:47 IST   |   Update On 2018-06-28 17:47:00 IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். #KailashMansarovarYatra #MEA #Rahulgandhi
புதுடெல்லி:  

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செய்வதற்காக சிறப்பு அனுமதி கோரி மத்திய  வெளியுறவு துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ராகுலின் விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டது. கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.


  
இந்நிலையில், ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வது தொடர்பான விண்ணப்பம் எதையும் நாங்கள் பெறவில்லை என தெரிவித்துள்ளார். #KailashMansarovarYatra #RaveeshKumar #Rahulgandhi
Tags:    

Similar News