செய்திகள்

குப்பை வீடியோவால் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு வந்த சிக்கல்

Published On 2018-06-24 07:50 GMT   |   Update On 2018-06-24 07:50 GMT
குப்பை கொட்டும் நபரை அனுஷ்கா சர்மா திட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவில் உள்ள நபர் தற்போது கோலி - அனுஷ்கா தம்பதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது காதல் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். சமீபத்தில் கோலியும் அனுஷ்காவும் தங்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தனர். அதில் காரில் வந்து குப்பை கொட்டிய இளைஞர் ஒருவரை அனுஷ்கா திட்டுவதாக காட்சி இருந்தது. அவரிடம் ‘‘ஏன் இப்படி குப்பை கொட்டுகிறீர்கள்’’ என்று அனுஷ்கா கோபமாக கேட்டு இருந்தார்.

இந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவர்களை பாராட்டினர். இதற்கிடையே, இந்த வீடியோவால் அவர் களுக்கு சிக்கல் 
ஏற்பட்டுள்ளது. வீடியோவில் அனுஷ்கா திட்டிய வாலிபர் தொழில் அதிபர் ஒருவரின் மகன் அர்ஹான் சிங் என்று தெரியவந்தது.

அந்த வீடியோவை பார்த்த அர்ஹான் சிங் கோபம் அடைந்தார். தன்னை அனுஷ்கா திட்டும் காட்சியை வெளியிட்டு அவமானப்படுத்தியதாக உணர்ந்தார். இதையடுத்து அவர் தன்னை இருவரும் அவமானப்படுத்தியது ஏன் என்று விளக்கம் கேட்டு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றி அர்ஹான் சிங் கூறுகையில், ‘‘என்னைப் பற்றி கோலியும் அனுஷ்காவும் சமூக வலைதளம் மூலமாக பொதுவில் அவமானப் படுத்தி விட்டார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். கோர்ட்டு தான் இதில் தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News