செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதி 4 பேர் பலி

Published On 2018-06-20 05:21 GMT   |   Update On 2018-06-20 05:21 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் அதிவேகமாக இயக்கப்பட்ட டேங்கர் லாரி மோதியதில் முதியவர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #UPaccident
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் நேற்று நள்ளிரவு சாலையில் அதிவேகமாக வந்த லாரி அப்பகுதியில் இருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் காவலர் பணிக்கு தேர்வு எழுதிவிட்டு திரும்பியவர்கள் 3 பேர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக விருந்தாவன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். #UPaccident
Tags:    

Similar News