செய்திகள்

வெயில் அதிகரிப்பு - ஆந்திராவில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

Published On 2018-06-19 05:26 GMT   |   Update On 2018-06-19 05:26 GMT
வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நகரி:

ஆந்திர மாநிலத்தில் கடும் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திராவில் அடுத்த 3 நாட்களுக்கு தற்போதுள்ள வெப்பத்தை விட அதிக வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது.



மேலும் 3 நாட்களுக்கு கடுமையான அனல் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மதிய வேளைகளில் வெளியில் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை மீறி தனியார் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News