செய்திகள்

மும்பை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் ஒருவர் மூச்சுத்திணறி பலி

Published On 2018-06-16 23:26 GMT   |   Update On 2018-06-16 23:26 GMT
மகராஷ்டிரா மாநிலம் மும்பையின் போரிவாலி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

மும்பை:

மகராஷ்டிரா மாநிலம் மும்பையை ஒட்டியுள்ள போரிவாலி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்று மாலை தீடீரென தீவிபத்து ஏற்பட்டது.  இந்த தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இரண்டு பெண்கள் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். 

ஆனால் தீயினால் ஏற்பட்ட அதிக அளவிலான புகையை சுவாசித்ததால் ஜெயா காரசியா (55) என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார், மற்றொருவரான லக்சுமி அரோலா (35) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News