செய்திகள்
பயனாளர்களின் விபரங்களை பேஸ்புக் பகிர்ந்து கொண்ட விவகாரம் - மத்திய அரசு நோட்டீஸ்
பயனாளர்களின் விபரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகளை சந்தித்துள்ள பேஸ்புக், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பயனாளர்களில் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக ஜூன் 20-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசு பேஸ்புக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.