செய்திகள்

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2018-06-06 18:40 GMT   |   Update On 2018-06-06 18:40 GMT
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #JammuKashmir #Militants #Killed
ஸ்ரீநகர்:

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மாச்சில் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் நேற்று அதிகாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிகாலை இருட்டை பயன்படுத்தி பயங்கரவாதிகள் சிலர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் நுழைய முயன்றனர்.

இதை கண்டறிந்த பாதுகாப்பு படையினர் உடனே அவர்களை சுற்றிவளைத்து, சரணடையுமாறு கூறினர். ஆனால் அவர்கள் தாங்கள் வைத்திருந்த தானியங்கி ஆயுதங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். உடனே இந்திய வீரர்களும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   #JammuKashmir #Militants #Killed  #tamilnews
Tags:    

Similar News