செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்து அசாம் மாநிலத்தில் 7 பேர் பலி

Published On 2018-06-03 14:10 GMT   |   Update On 2018-06-04 05:34 GMT
அசாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #SpuriousLiquor
திஷ்பூர் :

அசாம் மாநிலம், கோலகாட் மாவட்டத்தில் உள்ள போர்பதார் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 48 மணி நேரத்தில்  ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் தயாரித்தவர்கள் யார் ? அது எங்கு தயாரிக்கப்பட்டது ? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர். #SpuriousLiquor
Tags:    

Similar News