செய்திகள்

பஞ்சாப்பில் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொலை

Published On 2018-06-03 00:26 GMT   |   Update On 2018-06-03 00:26 GMT
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலரை பைக்கிள் வந்த இரு மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Punjab #municipalcouncillor #shotdead #Amritsar

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் குர்தீப் பெஹல்வான். இவர் அமிர்தசரசில் உள்ள கோல் பாக் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த குர்தீப் பெஹல்வானை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது 7 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு  ஜக்கு பாக்வான் பூரியா என்ற ரவுடிக்கும், கவுன்சிலருக்கும் இடையேயான முன்விரோதம் காரணமாக இருக்காலாம் என போலீசார் தெரிவித்துள்ளது.

ஜக்கு பாக்வான் பூரியா தற்போது அமிர்தசரஸ் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி கவுன்சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Punjab #municipalcouncillor #shotdead #Amritsar
Tags:    

Similar News