செய்திகள்

அருணாச்சலப்பிரதேசத்தின் தேஸு பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2018-06-02 07:15 GMT   |   Update On 2018-06-02 07:15 GMT
அருணாச்சலப்பிரதேசத்தின் தேஸு பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
இடாநகர்:

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் வட கிழக்கு பகுதியான லோஹித் மாவட்டத்தில் உள்ள தேஸு என்ற பகுதியில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். 5.2 ரிக்டர் என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Tags:    

Similar News