செய்திகள்

காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி

Published On 2018-06-01 20:35 GMT   |   Update On 2018-06-01 20:35 GMT
ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். #UriLandslide

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் உள்ள எல்லைக்கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் இருவர் சிக்கிக்கொண்டனர்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இதில் ராணுவ அதிகாரி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். மற்றொரு ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ராணுவ அதிகாரி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #UriLandslide #tamilnews
Tags:    

Similar News