செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்க கூடாது - பிரணாப் முகர்ஜிக்கு முன்னாள் மத்திய மந்திரி கடிதம்

Published On 2018-06-01 05:04 GMT   |   Update On 2018-06-01 05:04 GMT
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடாது என்று பிரணாப் முகர்ஜிக்கு முன்னாள் மத்திய மந்திரி ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு:

ஆர்.எஸ்.எஸ். சார்பில் நாக்பூரில் ஜூன் 7-ந் தேதி நடக்கும் விழாவில் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரணாப் முகர்ஜிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியுமான ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஆர்.எஸ்.எஸ். விழாவில் நீங்கள் (பிரணாப் முகர்ஜி) கலந்து கொள்ள இருக்கும் செய்தி அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. மத சார்பற்ற கொள்கையோடு பல ஆண்டுகள் அரசியலில் இருந்து நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசு தலைவர் பதவி வகித்த நீங்கள், பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்து கொள்வது சரியல்ல. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடாது.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் பரிசீலனையின்போது, ‘குடியரசு தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை வேட்பாளராக அறிவிப்பதில் யாரும் தவறு காண முடியாது. அவரது நாட்டுப்பற்றை யாரும் சந்தேகிக்க முடியாது’ என்று பிரதமர் மோடிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News