செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் இடி, மின்னல் தாக்கி 9 பேர் பலி

Published On 2018-05-29 05:26 GMT   |   Update On 2018-05-29 05:26 GMT
உத்தரப்பிரதேசத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #UPthunderstorm
லக்னோ

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து,  மீட்பு பணிகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. #UPthunderstorm
Tags:    

Similar News