செய்திகள்

உடல்பரிசோதனைக்காக சோனியாகாந்தி வெளிநாடு சென்றார்

Published On 2018-05-27 22:43 GMT   |   Update On 2018-05-27 22:43 GMT
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, தனது உடல் பரிசோதனைக்காக நேற்று இரவு வெளிநாடு சென்றார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, தனது உடல் பரிசோதனைக்காக நேற்று இரவு வெளிநாடு சென்றார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சென்றுள்ளார்.

இந்தநிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரிசபை அமைப்பது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் இருவரும் வெளிநாடு சென்றிருப்பதால் இந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News