செய்திகள்

சீனா சென்றார் சீதாராம் யெச்சூரி - கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு

Published On 2018-05-26 12:11 GMT   |   Update On 2018-05-26 12:11 GMT
இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ளார். #Yechury
புதுடெல்லி:

மார்க்சீய சித்தாந்தத்தை வடிவமைத்து தந்த பொதுவுடமைவாதி கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாட சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தது.

அவரது பிறந்தநாளையொட்டி, 21-வது நூற்றாண்டில் மார்க்சீயமும், உலகின் எதிர்கால பொதுவுடமையும் என்ற தலைப்பில் சீனாவின் குவான்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்ஸென் நகரில் வரும் 28-ம் தேதி மாபெரும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

சுமார் 150 நாடுகளை சேர்ந்த மா.கம்யூனிஸ்ட் தலைவர்கள் பங்கேற்கும் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று சீனா புறப்பட்டு சென்றார்.  #tamilnews #Yechury 
Tags:    

Similar News