செய்திகள்

குடிநீருக்காக ஆழமான கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்

Published On 2018-05-26 06:24 GMT   |   Update On 2018-05-26 06:24 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் 1 கி.மீ. தூரம் நடந்து அதிக ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Watercrisis
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள ஷாபூரா கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் அன்றாட தேவைக்காக 1 கி.மீ. தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். அங்குள்ள கிணற்றில் நீரானது அடிமட்டத்தில் உள்ளது. அதனை வாளி மூலம் இறைக்க முடியாததால் பெண்கள் படிக்கட்டுகள் இல்லாத கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் இறைத்தனர்.

 
இதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக அக்கிராமத்திற்கு தினமும் 2 லாரி தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பெண்கள் ஆபத்தான கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் இறைக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Watercrisis
Tags:    

Similar News