செய்திகள்

பல்கலைக்கழக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மானியக்குழு தடை

Published On 2018-05-19 13:50 IST   |   Update On 2018-05-19 13:50:00 IST
அனைத்து பல்கலைக்கழக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளது. #UGC #plasticban
புதுடெல்லி:

அனைத்து பல்கலைக்கழக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிக்கையில், 'டீ கப், பிளாஸ்டிக் கவரால் பேக் செய்யப்பட்ட மதிய உணவு, பிளேட்ஸ், பிளாஸ்டிக் ஸ்டாராஸ் போன்ற பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அறிவித்துள்ளது.



இந்த அறிவிப்பு மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த கோரிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலக சூற்றுச்சூழல் தினத்தை இந்தியா நடத்த இருக்கிறது. அதன் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் மாசுபாட்டை அழிப்பதாகும். அதனால் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. #UGC #plasticban
Tags:    

Similar News