செய்திகள்

மேற்கு வங்காளம் பஞ்சாயத்து தேர்தலில் வாட்ஸ்அப் மூலம் மனுதாக்கல் செய்த 5 பேர் வெற்றி

Published On 2018-05-17 11:44 GMT   |   Update On 2018-05-17 11:44 GMT
மேற்கு வங்காளம் உள்ளாட்சி தேர்தலில் வாட்ஸ்அப் மூலம் வேட்புமனு தாக்கல் செய்த 5 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினங்களில் மாநிலம் முழுவதும் பரவலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற காரணத்தினால் வாட்ஸ்அப் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதிக்கு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

அதன்படி 9 வேட்பாளர்கள் வாட்ஸ்அப் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களில் 5 பேர் இன்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற 5 நபர்களில் 3 பேர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #WestBengalPanchayatElections #TrinamoolCongress
Tags:    

Similar News