செய்திகள்

உத்தரகாண்டில் கார் - டிரக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Published On 2018-05-14 14:06 GMT   |   Update On 2018-05-14 14:06 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் காரும், டிரக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் காரும், டிரக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் நானக்மட்டா பகுதியில் இன்று ஒரு காரும், டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. 

இதில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews
Tags:    

Similar News