செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் கூட்டுப்பலாத்காரம் செய்து உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி பலி - இருவர் கைது

Published On 2018-05-11 10:58 GMT   |   Update On 2018-05-11 10:58 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #madhyapradeshgirl
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வகுப்பு சிறுமியின் பெற்றோர் நேற்று மாலை திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ரவீந்திர சாத்கார் சிறுமி வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை உயிருடன் எரித்தார்.

இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடன் விசாரணை நடைபெற்று வருகிறது.  #madhyapradeshgirl
Tags:    

Similar News