செய்திகள்

ஜார்கண்டில் துணிகரம் - ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை

Published On 2018-05-11 15:54 IST   |   Update On 2018-05-11 15:54:00 IST
ஜார்கண்ட் மாநிலத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை இரவோடு இரவாக உடைத்து, சுமார் 17 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரம் சில நாட்களாக இணைய சேவை இல்லாமல் இருந்து வந்துள்ளது. அந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு பாதுகாப்பு பணியிலும் யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 17 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் கூறியுள்ளார். இச்சம்பவத்தின் தொடர்புடைய அனைத்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #ATMLoot
Tags:    

Similar News