செய்திகள்

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை

Published On 2018-05-03 15:55 IST   |   Update On 2018-05-03 15:55:00 IST
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர்:

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக இறந்த பெண்ணின் பெற்றோர் கூறுகையில், தங்கள் மகளின் கணவரும், அவரது உறவினர்களும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #DowryCulture #DowryDeath

Similar News