செய்திகள்

இந்தியா - மியான்மர் எல்லைப்பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2017-12-30 00:25 GMT   |   Update On 2017-12-30 00:25 GMT
இந்தியா - மியான்மர் எல்லை பகுதியில் நேற்று இரவு 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியா - மியான்மர் எல்லை பகுதியில் நேற்று இரவு 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா - மியான்மர் எல்லைப்பகுதியில் நேற்று இரவு 9:49 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என்ற முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நேற்று மாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News