செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: புலவாமா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

Published On 2017-11-02 22:41 IST   |   Update On 2017-11-02 22:42:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தின் சம்பூரா கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை நோக்கி என்கவுண்டர் நடத்தினர்.

இந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் அங்கிருந்து தப்பியோடிய இரண்டு தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Similar News