செய்திகள்

இந்திரா காந்தியின் நினைவு தினம்: பிரணாப், மன்மோகன் சிங், ராகுல் காந்தி மரியாதை

Published On 2017-10-31 03:16 GMT   |   Update On 2017-10-31 03:16 GMT
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.
டெல்லி:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.



இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு இதே நாளில் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தானை வென்று வங்காளதேசம் எனும் புது நாட்டை உருவாக்கியது, முக்கிய உளவு அமைப்பான ரா-வை உருவாக்கியது என இந்திரா காந்தி தனது பதவிக்காலத்தில் சிறப்பான பல சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில், இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News