செய்திகள்

பள்ளி தலைமை ஆசிரியர் அடித்து வீட்டிற்கு அனுப்பிய 2 மாணவர்களை காணவில்லை

Published On 2017-09-23 10:08 GMT   |   Update On 2017-09-23 10:08 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் அடித்து வீட்டிற்கு அனுப்பிய 2 மாணவர்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஜான்பூர் பகுதிக்கு அருகே உள்ள மா துர்காஜி சீனியர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் 2 மாணவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பள்ளி முடிந்த பின் மாணவர்கள் வீட்டிற்கு வராததால் 2 மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அதற்கு வகுப்பு ஆசிரியர்கள் அவர்கள் 12 மணிக்கே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்துள்ளனர். மேலும், மாவட்ட கல்வி அதிகாரி பள்ளி நிர்வாகத்தின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். காணாமல் போன 2 மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Tags:    

Similar News