செய்திகள்

ரூ.50 லட்சம் செக் மோசடி: டி.வி. நடிகைக்கு 2 ஆண்டு ஜெயில்

Published On 2017-07-11 17:03 IST   |   Update On 2017-07-11 17:03:00 IST
ரூ.50 லட்சம் செக் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப் டிவி நடிகை மற்றும் அவரது தாயாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
புதுடெல்லி:

பஞ்சாப் டி.வி. நடிகை அல்கா கவுசல். இவர் சல்மான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தில் நடிகை கரீனாகபூருக்கு தாயாக நடித்துள்ளார்.

இவரும், தாயாரும் பஞ்சாபை சேர்ந்த அவதார்சிங் என்பவரிடம் டி.வி. தொடர் தயாரித்து கொடுப்பதாக கூறி ரூ.50 லட்சம் பணம் பெற்றனர்.

ஆனால் டி.வி. தொடர் எடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.50 லட்சத்தை 2 செக்காக திருப்பி கொடுத்தனர். அதை அவதார்சிங் வங்கியில் போட்ட போது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.

இதனை தொடர்ந்து நடிகை மற்றும் அவரது தாய் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சங்ரூர் கோர்ட்டு தாய்-மகளுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து இருவரும் மேல்கோர்ட்டில் அப்பீல் செய்தனர். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 2 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்தார்.

இதையடுத்து தாயும், மகளும் சங்ரூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Similar News