செய்திகள்

சாலைகளில் பசுக்களை நடமாடவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம்: அரியானா முதல்-மந்திரி அதிரடி

Published On 2017-05-02 07:22 GMT   |   Update On 2017-05-02 07:22 GMT
பசுக்களை சாலைகளில் நடமாடவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரியானா மாநில அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்து உள்ளது.
சண்டிகார்:

பசுக்களை பாதுகாக்க பா.ஜனதா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்புக்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

வங்காள தேச எல்லையில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்க பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பசுக்களை சாலைகளில் சுற்றி திரியவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரியானா மாநில அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்து உள்ளது.


அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மனோகர்லால் கட்டா முதல்- மந்திரியாக இருக்கிறார். அவர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மனோகர் லால் கட்டா இந்த முடிவை எடுத்தார்.

அரியானாவில் சாலைகளில் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிகின்றன. குறிப்பாக பசுக்கள் ரோடுகளில் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு மனோகர் லால் கட்டா கூறியுள்ளார்.
Tags:    

Similar News