செய்திகள்

ஸ்ரீநகரில் தடைபட்ட விமானச் சேவை இன்று பிற்பகல் மீண்டும் தொடங்கியது

Published On 2017-01-27 09:43 GMT   |   Update On 2017-01-27 09:43 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த தடைபட்ட விமானச் சேவை இன்று பிற்பகல் மீண்டும் தொடங்கியது
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த தடைபட்ட விமானச் சேவை இன்று பிற்பகல் மீண்டும் தொடங்கியது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் உறைப்பனியால் இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகலில் சூரியன் நன்றாக மிளிரத் தொடங்கியதால் விமான நிலைய ஓடுபாதையை தெளிவாக பார்க்க முடிந்தது. இதனையடுத்து, இன்று பிற்பகலில் இங்கிருந்து விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக ஸ்ரீநகர் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News