செய்திகள்

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச் சூடு

Published On 2016-11-18 13:42 IST   |   Update On 2016-11-18 13:43:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட மஞ்சகோட்டே எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள்மீது இன்றுகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி தந்ததாகவும், இருதரப்பினருக்கு இடையிலான துப்பாக்கிச் சண்டையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஜம்முவில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News