செய்திகள்

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மருமகன் கைது

Published On 2016-11-13 10:37 GMT   |   Update On 2016-11-13 10:37 GMT
டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகளை தாக்கியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர்:

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகா இவர் இம்ரான் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண பந்தத்தில் இருந்த அவர்களது குடும்பத்தில் திடீரென புயல் வீச ஆரம்பித்தது. கணவன் மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்து 10 மாதங்களாக லத்திகாவும் இம்ரானும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இம்ரான் கான் தன்னை தாக்கியதாக டெல்லி பரகாம்பர் போலீஸ் நிலையத்தில் லத்திகா புகார் அளித்தார். குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் இம்ரான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பெங்களூரில் வசிக்கும் இம்ரான்கானை அவரது வீட்டில் இன்று கைது  செய்தனர்.

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News