செய்திகள்

தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி: தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Published On 2016-10-14 18:33 GMT   |   Update On 2016-10-14 18:33 GMT
சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலியானது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
புதுடெல்லி:

சென்னை கிண்டியில் நேற்றுமுன்தினம் தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. தண்ணீர் லாரிகளை இயக்குவதில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்களில் எத்தனை பேர் பலியாகி உள்ளனர்? அந்த சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன? என்பன போன்ற விவரங்களை தாக்கல் செய்யுமாறு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

Similar News