செய்திகள்

சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல்: நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் மீது குற்றச்சாட்டு பதிவு

Published On 2016-08-19 07:22 GMT   |   Update On 2016-08-19 07:22 GMT
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் உள்பட 5 பேர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா, நிலக்கரி துறை அமைச்சக முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோவா, இயக்குனர் கே.சி.சாம்ரியா ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மேலும், விகாஷ் மெட்டல்ஸ் மற்றும் பவர் லிமிடெட், அதன் அதிகாரிகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் மீது மோசடி மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Similar News