இந்தியா

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்- 2 விமானிகள் உயிரிழப்பு

Published On 2023-03-16 13:46 GMT   |   Update On 2023-03-16 13:46 GMT
  • விபத்து நடந்த பகுதியில் 5 குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
  • பங்ளாஜாப் கிராமத்தின் அருகில் ஹெலிகாப்டரின் கருகிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 2 விமானிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டது.

இந்திய ராணுவம், சகஷ்த்ர சீமா பால் மற்றும் இந்தோ திபெத்திய எல்லை காவல் படையினர் 5 குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மண்டாலாவின் கிழக்கே பங்ளாஜாப் கிராமத்தின் அருகில் ஹெலிகாப்டரின் கருகிய பாகங்கள் கண்டுபிடிக்கபப்ட்டன. அதில் பயணித்த விமானிகள் விவிபி ரெட்டி, மேஜர் ஜெயந்த் ஆகியோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

Tags:    

Similar News