இந்தியா
வளைகுடா நாட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல்
- கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.58 லட்சம் ஆகும்.
- தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிக்கிய பயணியிடம் தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு வளைகுடா நாடான மஸ்கட்டில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் அந்த பயணியின் உடமைகளை பரிசோதித்தனர்.
அப்போது அவரிடம் ஒரு கிலோ 182 கிராம் எடையுள்ள தங்கம் இருந்தது தெரியவந்தது. அதனை அவர் கேப்ஸ்யூல் வடிவில் உடலுக்குள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.58 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிக்கிய பயணியிடம் தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.