இந்தியா

குரங்கம்மை

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

Published On 2022-09-19 17:56 GMT   |   Update On 2022-09-19 17:56 GMT
  • டெல்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • டெல்லியில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் இதுவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருந்தது தெரியவந்தது. டெல்லியில் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

Tags:    

Similar News