இந்தியா
எச்3என்2 காய்ச்சல் - மகாராஷ்டிரத்தில் முதியவர் உள்பட 3 பேர் பலி
- மகாராஷ்டிராவில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு 119 பேர் பாதிப்பு அடைந்தனர்.
- மேலும், 73 வயது முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மும்பை:
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி கொரோனோ பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.
மார்ச் 8-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்ததாகவும், தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 119 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், 73 வயது முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது