செய்திகள்
இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியது

இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியது

Published On 2020-04-25 02:52 GMT   |   Update On 2020-04-25 02:52 GMT
சிறப்புமிக்க ரமலான் மாத பிறை நேற்று மாலையில் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தென்பட்டதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை :

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஆகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர் ஆன் அருளப்பட்டது. ஹஜ்ஜை தவிர ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத் (கட்டாயக்கொடை) ஆகிய 4 கடமைகளும் ஒரு சேர இந்த ரமலான் மாதத்தில் நிறைவேறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க ரமலான் மாத பிறை நேற்று மாலையில் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தென்பட்டதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு தலைமை ஹாஜி மவுலவி முப்தி சலாகுதீன் முகம்மது அய்யூப் வெளியிட்டுள்ளார். 
Tags:    

Similar News